BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

31 மே, 2018

🔶🔷6-9 வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறன் கண்டறிதல்தேர்வு மற்றும் bridge course அளித்து மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல்

🔶🔷6-9 வகுப்பு மாணவர்களின் அடைவுத்திறன் கண்டறிதல்தேர்வு மற்றும் bridge course அளித்து மாணவர்களின் தரத்தை மேம்படுத்துதல்



🔶🔷தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி வரன்முறை -உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ›

🔶🔷தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி வரன்முறை -உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு



🔷🔶வகுப்புகளில் கைடு, நோட்ஸ் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை

🔷🔶வகுப்புகளில் கைடு, நோட்ஸ் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை


30 மே, 2018

இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கல்வி: தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவிப்பு

இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கல்வி: தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அறிவிப்பு


இணையதள கல்விக் கழகம் மூலம் இணைய வழியில் கணினி தமிழ் பாடத் திட்டம்

இணையதள கல்விக்கழகம் மூலம் இணைய வழியில் கணினித் தமிழ் பாடம் கற்றுத் தரப்படும் என்று  அமைச்சர் மணிகண்டன் அறிவித்துள்ளார்

தமிழ் மொழியை கணினிக்கு கொண்டு செல்லும் கட்டாயம் உள்ளது

எனவே, கணினித் தமிழ் பாடத்திட்டத்தை பட்டயப் படிப்பாக இணைய வழியில் இணையதள கல்விக் கழகம் பயிற்றுவிக்க உள்ளது

அரசுத் துறைகளுக்கு தேவைப்படும் பட்சத்தில், தகவல் தொழில்நுட்ப பணியாளர் தொகுப்பில் இருந்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்

 அரசுத் துறைகளின் இணையதளங்கள் உரிய கால இடைவெளியில் பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும்

அரசுப்பள்ளிகளின் சீருடை மாற்றம்- 1 முதல் 12 ஆம் வகுப்புவரை -முழு விவரப்படங்கள் - Govt School new uniform class wise (1-5, 6-8, 9-10, 11-12)





29 மே, 2018

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...


பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது

பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை : கலைப்பிரிவுகளில் சேர குவியும் மாணவர்கள்


பள்ளிகளில் பிளஸ்1 சேர்க்கை : கலைப்பிரிவுகளில் சேர குவியும் மாணவர்கள்

பிளஸ் 1 வகுப்பு சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான மாணவர்கள் கலைப்பிரிவுகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதனால், அப்பிரிவில் கூடுதல் வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 23ம் தேதி வெளியானது. மாநிலம் முழுவதும் 94.5 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதனையடுத்து பிளஸ் 1 வகுப்புகளுக்கான சேர்க்கை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தொடங்கியது. பெற்றோருடன் செல்லும் மாணவர்கள், தங்களுக்கு விருப்பமான பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து சேர்க்கை பெற்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக, அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நடப்பாண்டும் அது தொடர்ந்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை பொறுத்தவரை, கணிதம் மற்றும் கணினி அறிவியல், கணிதம் மற்றும் உயிரியல் பாடங்கள் அடங்கிய அறிவியல் பிரிவும், வணிகவியல், பொருளியல் அடங்கிய கலைப்பிரிவும் மட்டுமே பெரும்பாலான அரசு பள்ளிகளில் உள்ளன. இவற்றில் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுகுறித்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறுகையில், ‘இன்ஜினியரிங் படிப்பு மீதான மோகம் குறைந்ததால், பிளஸ் 1 அறிவியல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாகவே, கலைப்பிரிவில் சேர தான் மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

எளிதாக தேர்ச்சி பெறலாம், அதிக மதிப்பெண் பெற முடியும், பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்தலாம், உயர்கல்வியில் பல பிரிவுகளில் சேரும் வாய்ப்பு போன்றவையே மாணவர்களில் பலர் கலைப்பிரிவை தேர்ந்தெடுக்க காரணம். மேலும், பிளஸ் 1 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படுவதால், அறிவியல் பிரிவில் படிப்பது கடினமாக இருக்கும் என மாணவர்கள் எண்ணுகின்றனர். மேல்நிலைப்பள்ளிகளில் கலைப்பிரிவில் உள்ள இடத்திற்கும் கூடுதலாக மாணவர்கள் வருவதால், அனைவருக்கும் சேர்க்கை வழங்க முடிவதில்லை. எனவே, மாணவர்கள் ஆர்வம் காட்டும் பள்ளிகளில் மட்டும் கூடுதல் வகுப்புகளை தொடங்கவும், ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கல்

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து, பிளஸ் 1 வகுப்புகளில் சேர்க்கை நடந்து வருகிறது. மேலும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் மாணவர்கள் படையெடுத்து வருகின்றனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மூலம் நேற்று வழங்கப்பட்டது.

நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் நடப்பாண்டு முதன்முறையாக, பிளஸ் 1 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடந்தது. மார்ச் 7ம் தேதி தொடங்கிய தேர்வு, ஏப்ரல் 16ம் தேதி நிறைவடைந்தது. சேலம் மாவட்டத்தில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தேர்வை எழுதியுள்ளனர். இதே போல் நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அனைத்து தேர்வுகளிலும் அதிகளவில் மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். இதனிடையே தேர்வு முடிவுகள் நாளை (30ம் தேதி) வெளியிடப்படவுள்ளது. முதன்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளதால், பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வு முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

பிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை

பிளஸ் 1 பாடப்பிரிவுகள் பள்ளிகளில் நிறுத்த தடை

மதிப்பெண் அடிப்படையில், பிளஸ் 1 பாடப்பிரிவுகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி, மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள், எந்த பிரிவாக இருந்தாலும், அவர்களை, பொது பிரிவினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். பொது பட்டியலில் வர தகுதியில்லாத, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களையே, இட ஒதுக்கீட்டில் சேர்க்க வேண்டும். இதில், எந்த முறைகேடும் நடக்கக் கூடாது என, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், பிளஸ் 1ல், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு எனக்கூறி, எந்த பாடப்பிரிவையும் நிறுத்தக் கூடாது என்று, பள்ளிக் கல்வித் துறை எச்சரித்துள்ளது.இதுகுறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் பிறப்பித்துள்ள உத்தரவில், 'தற்போது, பிளஸ் 1 வகுப்பில், நடைமுறையில் உள்ள, எந்த பாடப்பிரிவையும், வகுப்பையும் நிறுத்தக் கூடாது. 'முழு அளவில் மாணவர்களை சேர்க்க வேண்டும். அதிக மாணவர்கள் இருந்தால், கூடுதலாக, ஒரு பிரிவு துவங்குவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், தலைமை ஆசிரியர்களும் ஆலோசிக்க வேண்டும்' என, கூறியுள்ளார்.


52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன

52 புதிய கல்வி மாவட்டங்கள் உதயமாகின்றன
மாநிலத்தில் 52 புதிய கல்வி மாவட்டங்கள் செயல்பட அரசாணை வெளியிட்டு முதன்மைச்செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.
கல்வி துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிகுலேசன் பள்ளிகளின் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர் என்ற பெயரில் செயல்பட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், ஆங்கிலோ இந்திய பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகம், மாவட்ட வயது வந்தோர் கல்வி அலுவலர் அலுவலகம் ஆகியவற்றிற்கு அலுவலர் மற்றும் பணியாளர் பணியிடங்கள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்ட கல்வி அலுவலங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.மாநிலத்தில் உள்ள 32 மாவட்ட தொடக்க கல்வி அலுவலங்கள், 3 முறைசாரா மாவட்ட கல்வி அலுவலகங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலங்கள் என 52 அலுவலகங்கள் கலைக்கப்பட்டு, 52 புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் துவக்க அரசு முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன்ட்டர்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கம்;

பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன்ட்டர்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கம்;

*📚📚📚பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் விற்பனைக்கு சிறப்பு கவுன்ட்டர்: சென்னை டிபிஐ வளாகத்தில் தொடக்கம்; பிளஸ் 1 புத்தகங்கள் ஜூன் 2-வது வாரத்தில் கிடைக்கும் என தகவல்*
*📗பிளஸ் 2 பாடப்புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் சிறப்பு கவுன்டர் தொடங்கப் பட்டுள்ளது*
*📗அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக் கான பாடப்புத்தகங்கள் பள்ளி கள் திறக்கப்படும் நாளன்று (ஜூன் 1) அவர்களுக்கு வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களுக்கு முன்கூட்டியே அனுப்பப்பட்டுவிட்டன*
*📗தனியார் சுயநிதி பள்ளி மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும், சென்னை டிபிஐ வளாகத்தில் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர் மற்றும் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத் தில் உள்ள சிறப்பு விற்பனை கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன*
*📗பிளஸ் 1 தவிர ஒன்று முதல் பிளஸ் 2 வரை மற்ற அனைத்து வகுப்புகளுக் கான பாடப் புத்கங்களையும் பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டரிலும், அதன் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை மையங்களிலும் மாணவ - மாணவிகள் வாங்கிக்கொள்ளலாம்*
*📗மேலும், பாடநூல் கழகத்தின் இணையதளத்தை (www.textbookcorp.in) பயன்படுத்தி ஆன்லைன் மூலமாகவும் பதிவுசெய்து கூரியர் மூலமாக புத்தகங்களை வாங்கலாம். ஆன்லைன் மூலமாக ஒவ்வொரு மாணவரும் தங்கள் வகுப்புக்குரிய ஒரு செட் புத்தகத்தை மட்டுமே பெற்றுக்கொள்ளலாம்*
*📗ஒருவரே ஒன்றுக் கும் மேற்பட்ட பாடப்புத்தகங்கள் வாங்கிவிடக்கூடும் என்பதால் மற்ற மாணவர்களுக்கு கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும், அதிக புத்தகங்கள் வாங்கி கூடுதல் விலைக்கு விற்கப்படும் வாய்ப்பைத் தடுக்கவும் இத்தகைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித்தார்*
*📗ஒவ்வொரு புத்தகத்திலும் அச்சிடப்பட்டுள்ள விலையை விட கூடுதல் விலைக்கு புத்தகங்கள் விற்பனை செய்யும் விற்பனை மையங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்*
*📗இதற்கிடையே, டிபிஐ வளாகத் தில் பிளஸ் 2 மாணவர்களின் வசதிக்காக சிறப்பு கவுன்ட்டரை பாட நூல் கழகம் தொடங்கியிருக்கிறது*
*📗இந்த கவுன்ட்டர் டிபிஐ வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனையகத்துக்கு அருகில் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய தகவல் மையத்தை ஒட்டிய பகுதி) இயங்குகிறது. இங்கு பிளஸ் 2 பாடப்புத்கங்கள் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன*
*📚📚பிளஸ் 1 புதிய புத்தகங்கள்*
*📗இந்த ஆண்டு 1,6,9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. 1, 6, 9-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன*
*📗📗பிளஸ் 1 வகுப்புக்கான புதிய பாடப்புத்தகம் ஜூன் 2-வது வாரம் விற்பனைக்கு கிடைக்கும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் தெரிவித் தார்*

💢 மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் பட்டயப் படிப்பு துவங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

💢 மருத்துவ கல்லூரி இல்லாத மாவட்டங்களில் பட்டயப் படிப்பு துவங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

மருத்துவ கல்லூரி இல்லாத இடங்களில் பட்டயப் படிப்பு துவங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் முதுநிலை பட்டயப்படிப்பு (பிஜி டிப்ளமோ) தொடங்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை  கூட்டம் இன்று தொடங்கியது. காலை 10 மணிக்கு அவை கூடியதும் முன்னாள் எம்எல்ஏ-க்கள் செ.மாதவன், கே.கே.ஜி.முத்தையா, சா.கணேசன், பி.அப்பாவு, ஆர்.சாமி, ஜெ.குரு என்கிற குருநாதன், பூபதி மாரியப்பன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதன்பின்னர் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் வேண்டும் என பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சேகர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பட்டுக்கோட்டை அரசு பொது மருத்துவமனைக்கு ரூ. 2,20,00,000  செலவில் முதன்மை சிகிச்சை பிரிவும்,  ரூ.1,20,00,000 செலவில் அறுவை சிகிச்சை பிரிவும்,  12 லட்சம் செலவில் இளம் சிசு பராமரிப்பு மையமும் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் அதற்கான கட்டுமான பணிகள் விரைவாக நடைப்பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,  தேவைக்கேற்ப புதிய கட்டிங்களும்  கட்டித்தரப்படும் என்று விளக்கமளித்தார். இதுதவிர பட்டுக்கோட்டை, கடலூர், கோவில்பட்டி போன்ற பகுதிகளில் மருத்துவக்கல்லூரி இல்லாத மருத்துவமனைகளில் பி.ஜி.கோர்ஸ் என சொல்லக்கூடிய முதுநிலை பட்டயப்படிப்புகள் தொடங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாகவும் அவை விரைவில் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்குறுதி அளித்தார்

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டியூசன் நடத்தக்கூடாது.இணை இயக்குநர் உத்தரவு


அரசுப் பள்ளி ஆசிரியர்கள்
டியூசன் நடத்தக்கூடாது.!


புதுச்சேரியில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தனியாக டியூசன் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை ஆணைப் பிறப்பித்துள்ளது. மேலும், பயிற்சி மையம் மற்றும் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளிக்கு சென்றும் சிறப்பு வகுப்பு எடுக்கக் கூடாது என்று இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

22 மே, 2018

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?

WhatsApp-ல் Delete செய்த படங்கள் & வீடியோவை திரும்ப பெறுவது எப்படி?

இந்தியாவில் பல மில்லியன் மக்கள் வாட்ஸ் அப் செயலியை அதிகம் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக குறுந்தகவல் முதல் தொழில் சம்மந்தப்பட்ட அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த செயலி அதிகளவு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டின் மூலம் நீக்கப்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை மிக எளிமையாக திரும்ப பெறலாம் என வாட்ஸ்அப் நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடு பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக வாட்ஸ்அப் செயலியில் அனுப்பப்படும்,பெறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பயனர்கள் நீக்கிவிட்டால் அதனை மீண்டும் பெறுவது என்பது இயலாத காரியம், ஆனால் தற்சமயம் கொண்டுவந்துள்ள புதிய அப்டேட் மூலம் மிக எளிமையா போட்டோ மற்றும் வீடியோக்களை திரும்பபெற முடியும். இப்போது வாட்ஸ்ஆப் செயலியில் ரீடவுன்லோடு (WhatsApp) எனும் புதிய வசதி வழங்கப்பட்டுள்ளது, இதன்மூலம் அனுப்பப்பட்ட புகைபடங்கள், வீடியோக்களை எளிமையாக திரும்ப பெற முடியும்.

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்



ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்


ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின்
முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது.  ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்று சொன்னால் மக்கள் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று கேட்கிறார்–்கள். 365 நாட்கள் பணி நாட்கள் உள்ள நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. 
அதிலே தேர்வுக்காக குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் 170 முதல் 175 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. புதிய பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 

பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வசதியாக தொடக்கப் பள்ளிகள்  30 பள்ளிகளாக பிரிக்கப்பட்டு  அவர்கள் ஆண்டுக்கு 2 முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.  
மேலும், பள்ளிகள் மீது குற்றம் குறைகள் மற்றும் புகார்கள் வந்தால் அடுத்த 1 மணி நேரத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பதில் கொடுத்தாக வேண்டும். அதற்கான தீர்வுகளையும் அவர்கள் உடனடியாக செய்ய வேண்டிய அனுமதியும் வழங்கப்படுகிறது. 
வேகமாக பணி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. அரசுக்கு நிதி நெருக்கடி உள்ள நிலையில், ஒரு நபர் கமிட்டியிடம் ஆசிரியர்கள் அலுவலர்கள் உங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இந்நிலையில் பள்ளி திறந்த பிறகு ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர். 
அதனால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே ஆசிரியர்கள் உண்ணா விரதம் போன்ற போராட்டங்களை கைவிட்டு பள்ளிகள் சிறப்பாக செயல்பட ஒத்துழைக்க வேண்டும். 
 கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க ஆன்லைன் மூலம் 1 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இரண்டு நாட்களில் குழு அமைத்து அவற்றுக்கு தீர்வு காணப்படும். 

தனியார் பள்ளிகளுக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அவற்றை பள்ளி தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.  கூடுதல் கட்டணம் கேட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கிருஷ்ணகிரியில் உள்ள பள்ளி ஒன்றில் 29 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்று தெரியவந்துள்ளது. 
அங்கு தெலுங்கு மொழி ஆசிரியர் இல்லை. அதனால் இந்த நிலை. எனவே அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்து ஜூன் 25ம் தேதி நடக்க உள்ள தேர்வில் தேர்ச்சி பெற ஏற்பாடு செய்யப்படும். பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  
ஜூன் மாத இறுதிக்குள் நிரப்பப்படும். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு குறிப்பிட்ட நாளில் வெளியாகும். பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதி பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்



ஜூன் மாத இறுதிக்குள் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்



பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் / ஜூலை 2018 மார்ச் / ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.





தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் 28.05.2018 பிற்பகல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் பதிவிறக்கம் செய்தல் 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மைய தலைமையாசிரியர்கள் வழியாகவும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், 28.05.2018 பிற்பகல் முதல் பள்ளி மாணவர்கள் / தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழைத் தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

SSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.

SSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.



மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். மார்ச் / ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 24.05.2018 (வியாழக் கிழமை) முதல் 26.05.2018 (சனிக் கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டல் கட்டணம் பகுதி – I மொழி - ரூ.305/- பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/- பகுதி – III - கணிதம், அறிவியல் மற்றும் - ரூ.205/- சமூக அறிவியல் பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/- மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது.


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத்தேர்வு, ஜூன் / ஜூலை 2018 மார்ச் / ஏப்ரல் 2018-ல் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவுசெய்து, தேர்ச்சி பெறாதோருக்கும் / வருகை புரியாதோருக்கும் நடத்தப்படும் சிறப்பு துணைப் பொதுத்தேர்வு 28.06.2018 முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

13 மே, 2018

பள்ளித்திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை


பள்ளித்திறப்பை தள்ளி வைக்க தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என
உத்தரவிட்டுள்ளது ஏன் என கேள்வி எழுப்பிள்ள சமூக ஆர்வலர்கள், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 
முன்னதாக தமிழக அரசு நேற்று பிறப்பித்துள்ள உத்தரவில் கோடை விடுமுறை முடிந்து 2018-2019ம் கல்வியாண்டில் ஜூன் 1ம் தேதி அன்று அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வி துறைஅமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.அதன் அடிப்படையில், ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து வகையான பள்ளிகளும் கோடைவிடுமுறை முடிந்து திறக்கப்பட உள்ளன.
இந்த சூழலில் 1ம் தேதியன்று மாணவர்கள்பள்ளிக்கு வரும்போது பள்ளி வளாகம் தூய்மையானதாகவும், நேர்த்தியாகவும், கற்கும் சூழலுக்கு ஏற்ற வகையிலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப, அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை பின்பற்றி பள்ளி வளாகத்தை தயார்படுத்திட வேண்டும் என்று கூறியிருந்தது.1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மற்றும் 11-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டுமே பள்ளி திறக்கப்பட உள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப்புத்தகங்களும் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வலியுறுத்தியுள்ளனர். தற்போது 6,9,11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான புதிய புத்தகங்கள் இன்னும் கடைகளில் கிடைக்கவில்லை என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலையில்அவசர அவசரமாக பள்ளிகளை திறப்பது ஏன் என வினவியுள்ளனர்.
வெயிலின் தாக்கத்தை மாணவர்கள் சமாளிக்க கூடிய வகையில் பெரும்பாலான பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இதனால் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளித்திறப்பை தள்ளி வைக்கவும் அவர்கள் கோரியுள்ளனர். மேலும் பாடப்புத்தகத்தை அரசு மாற்றியதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறதா என எனவும் அவர்கள் வினவியுள்ளனர்.

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்: கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்

தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகத்தில் இருந்து நீட் தேர்வில் 40 சதவீத கேள்விகள்: கல்வியாளர்களின் ஆய்வில் தகவல்


நாடு முழுவதும் நடந்த நீட் தேர்வில் பிளஸ் 2 பாடத்தைவிட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அதிலும் குறிப்பாக,
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட பிளஸ் 1 பாடப் புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டதுகல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் - AYUSH) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இத்தேர்வுக்கு 13,26,775 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அதில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.தமிழகத்தில் மட்டும் விண்ணப்பித்திருந்த 1,07,288 பேரில் சுமார் 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 10 நகரங்களில் உள்ள 170 மையங்கள் உட்பட நாடு முழுவதும் 136 நகரங்களில் 2,255 மையங்களில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உட்பட மொத்தம் 11 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற்றது.
180 கேள்விகள்
தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் வீதம் மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்கள். ஒவ்வொரு கேள்விக்கும் கொடுக்கப்பட்ட 4 விடைகளில் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தவறான விடைகளுக்கு தலா 1 மதிப்பெண் குறைக்கப்படும்.
இந்நிலையில், பிளஸ் 2 பாடங்களைவிட, பிளஸ்1 பாடங்களில் இருந்துதான் இந்த நீட் தேர்வில்அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.நீட் தேர்வில் பிளஸ்1 இயற்பியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 இயற்பியலில் 23 கேள்விகள், பிளஸ்1 வேதியியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 வேதியியலில் 23 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. பிளஸ்1 தாவரவியலில் 30 கேள்விகள், பிளஸ் 2 தாவரவியலில் 15 கேள்விகளும், பிளஸ்1 விலங்கியலில் 22 கேள்விகள், பிளஸ் 2 விலங்கியலில் 23 கேள்விகள் வினாத்தாளில் இடம்பெற்றிருந்தன.ஒட்டுமொத்தமாக நீட் தேர்வில் 180 கேள்விகளில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 96 கேள்விகளும் (53 சதவீதம்), பிளஸ் 2 பாடங்களில் இருந்து 84 கேள்விகளும் (47 சதவீதம்) கேட்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த நீட் தேர்வில் பிளஸ் 1 பாடங்களில் இருந்து 51 சதவீத கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
தமிழக அரசு அண்மையில் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடப் புத்தகங்களை வெளியிட்டது. இதில் இயற்பியலில் இருந்து 11 கேள்விகள், வேதியியலில் இருந்து 11 கேள்விகள், தாவரவியலில் இருந்து 29 கேள்விகள், விலங்கியலில் இருந்து 11 கேள்விகள் என மொத்தம் 72 கேள்விகள் (40 சதவீதம்) கேட்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு ஆன்லைன் தேர்வு இந்தாண்டே அறிமுகமாகிறது

தமிழகத்தில் ஐந்தாம் வகுப்பிற்கு ஆன்லைன் தேர்வு இந்தாண்டே அறிமுகமாகிறது



11 மே, 2018

இன்ஜி.சேர்க்கை 36 ஆயிரம் பேர் இதுவரை பதிவு


இன்ஜி.சேர்க்கை 36 ஆயிரம் பேர் இதுவரை பதிவு



இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு மே 3-ம் தேதி தொடங்கியது. முதல் நாளிலேயே 7,420 மாணவ-மாணவி கள் பதிவு செய்தனர். தொடர்ந்து மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். 7-வது நாளான நேற்று இரவு 7.30 மணி நிலவரப்படி, 4035 பேர் ஆன்லைனில் பதிவுசெய்தனர். அவர்களில் 3,468 பேர் வீடுகளில் இருந்தவாறும், எஞ்சிய 567 பேர் அண்ணா பல்கலைக்கழகம் அமைத்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்தனர். பதிவு தொடங்கிய கடந்த ஒரு வார காலத்தில் 36,559 பேர் பதிவுசெய்துள்ளதாக பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் வி.ரைமன்ட் உத்தரியராஜ் தெரிவித்தார்.

9 மே, 2018

அப்படி இருந்தால் CO அலுவலகத்திற்கு தெறிவிக்கலாம்


#சட்டம் #அறிவோம் #சங்கத்தை #பதிவு #செய்வது #எப்படி?

ஒரு சங்கத்தின் செயல்பாடுகள் என்பது அச்சங்கத்துக்கும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையேயான உள்விவகாரம். எனவே நீதிமன்றங்கள் சங்கம் சம்பந்தப்பட்ட சர்ச்சைகளில் சாதாரணமாக தலையிடுவதில்லை. ஆனால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலாவது சங்கத்தின் நடவடிக்கை அதற்குரிய வரம்புகளை மீறியும், சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு முரண்பாடாகவும், உறுப்பினர்களின் தனிமனித உரிமைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் செயல்படுவதாக புகார் எழுமானால் நீதிமன்றங்கள் தலையிடக்கூடும். நம் தமிழ் நாட்டை பொறுத்தவரை சங்கங்களின் செயல்பாடுகள் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 க்கு உட்பட்டிருக்க வேண்டும்.
1975 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், அதற்குரிய தமிழ்நாடு சங்கங்கள் பதிவு விதிகளுடன் 22.4.1978 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது இச்சட்டம் நடைமுறைக்கு வரும் முன்பு மத்திய சட்டமான "1860 ஆம் ஆண்டு சங்கங்கள் பதிவுச் சட்டம்" அமலில் இருந்தது.

மேற்படி சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம் சமுதாயத்தில் ஒரு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுகிறது. ஒரு காலகட்டத்தில் சங்கங்களுக்கு அத்தகைய சட்டப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட முடியுமா? என்ற சந்தேகம் இருந்தது ஏனென்றால் அக்காலங்களில் சட்டப்பூர்வ அங்கீகாரம் என்பது, தனி மனிதர்கள், கூட்டுத் தொழில் நிறுவனங்கள் (Partnerships) மற்றும் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் (Corporate Companies) ஆகியவைகளுக்கு மட்டுமே இருந்தன இந்த சட்டத்தை பொறுத்தவரை நிறுவனங்களுக்கும் (Companies) சங்கங்களுக்கும் (Societies) இடையே உள்ள வேறுபட்ட ஒரு அம்சம் என்னவென்றால், பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனமானது கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நிறுவனத்தின் சொத்துக்கள் அதனுடைய உறுப்பினர்களிடையே பிரித்துக் கொடுக்கப்படும். ஆனால் ஒரு சங்கத்தை பொறுத்தவரை அத்தகைய சூழ்நிலை ஏற்பட்டால் அதனுடைய சொத்துக்களில் அதன் உறுப்பினர்கள் எவ்வித உரிமையும் கோர முடியாது.
பிரிவு - 42 :
அதாவது மேற்படி சட்டப்பிரிவு 42 ன்படி பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கம், கலைக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளானால் அவ்வாறு கலைக்கப்பட பிறகு, அச்சங்கத்தால் கொடுக்கப்பட வேண்டிய தொகைகள் அனைத்தும் கொடுக்கப்பட்ட பிறகு, அச்சங்கத்திற்குரிய சொத்துக்கள் ஏதேனும் மீதம் இருக்குமானால், அச்சொத்து அச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட மாட்டாது மாறாக சங்கத்தின் ஒரு சிறப்பு தீர்மானம் மூலமோ அல்லது அவ்வாறு இயற்றப்பட இயலாவிட்டால் நீதிமன்ற ஆணைப்படியோ, அத்தகைய மீதமுள்ள சொத்துக்கள் அச்சங்கத்தை போன்ற குறிக்கோளுடன் செயல்படும் பதிவு செய்யப்பட்ட வேறு ஒரு சங்கத்திடம் ஒப்படைக்கப்படும்.
தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 இல் உள்ள ஒரு புதிய அம்சம் என்னவென்றால் சங்கங்களை பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சட்டப் பிரிவு 4 ன்படி, எந்தவொரு சங்கத்தில் 20 க்கும் குறையாத உறுப்பினர்கள் உள்ளார்களோ அல்லது சங்கத்தின் ஆண்டு வரவு - செலவு ரூபாய் 10,000/-க்கு மேல் உள்ளதோ அச்சங்கம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டிய சங்கம் ஆகும்.
புதிதாக துவக்கப்படும் சங்கம் அமைக்கப்பட இருக்கும் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் அச்சங்கம் பதிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு சங்கத்தை தோற்றுவித்தலும், பதிவு செய்தலும் :
பிரிவு 3 மற்றும் விதி 3 இல் கூறப்பட்டுள்ள நோக்கங்களையும், பயனுள்ள குறிக்கோள்களையும் கொண்ட சங்கங்களை தோற்றுவித்து பதிவு செய்யலாம்.
உடல் ஊனமுற்றோரின் நலன், வேலை செய்யும் பெண்களின் நலன், வேலை வாய்ப்பற்றோர் நலன், சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணிகளின் நலன், கைவிடப்பட்டோர் நலன் மற்றும் பொருளாதார மற்றும் சமூக அளவில் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்டோர் நலன் போன்றவை விதி 3 இல் கூறப்பட்டுள்ள பயனுள்ள குறிக்கோள்களில் சிலவாகும்.
(ஆ) சங்கத்தை ஆரம்பிக்க தேவையான உறுப்பினர்கள் எண்ணிக்கை :
ஒரு சங்கத்தை தோற்றுவிப்பதற்கு குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் தேவை (பிரிவு 3(2))
பிரிவு 7 ன்படி பதிவு செய்யத் தாக்கல் செய்யப்படும் விவரக்குறிப்பிலும் (Memorandum) சங்கத் தனி நிலைச் சட்ட விதிகளிலும் (Bye - laws) குறைந்த பட்சம் 7 உறுப்பினர்கள் கையெழுத்திட வேண்டும்.
சங்கத்தின் அலுவல்களை நடத்த குறைந்த பட்சம் 3 உறுப்பினர்கள் கொண்ட குழுவை (Committee) சங்க மொத்த உறுப்பினர்கள் சாதாரணப் பெரும்பான்மையில் ( Simple Majority) தேர்ந்தெடுக்க வேண்டும். இக்குழுவை நிர்வாக குழு அல்லது செயற்குழு (Executive Committee) என்றும் அழைக்கலாம்.
அதாவது நிர்வாக குழுவில் தலைவர், துணைத் தலைவர் அல்லது துணைத் தலைவர்கள், செயலாளர், துணை செயலாளர் அல்லது துணைச் செயலாளர்கள், பொருளாளர், நிர்வாககுழு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளை கொண்டவர்கள் இருக்கலாம்.
(இ) சங்கத்தை பதிவு செய்ய தாக்கல் செய்யப்பட வேண்டிய ஆவணங்கள் :
நிர்வாககுழு உறுப்பினர் ஒருவரால் அல்லது அக்குழுவினால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஒருவரால், மாவட்ட பதிவாளர் முன்பு கீழ்க்கண்ட ஆவணங்களை தாக்கல் செய்து சங்கம் அமைக்கப்பட்ட தேதியிலிருந்து பிரிவு 4(1) இல் கூறப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றிய தேதியிலிருந்து 3 மாத காலத்திற்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
1. விதிகளின் பிற்சேர்க்கையில் (Schedule) கொடுக்கப்பட்டுள்ள பூர்த்தி செய்யப்பட்டுள்ள படிவ எண் 1
2. சங்க விவரக்குறிப்பு (Memorandum of Association)
3. சங்கத் தனி நிலைச் சட்ட விதிகள் (Bye - laws of the Society)
4. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 5
5. பூர்த்தி செய்யப்பட்ட படிவ எண் 6
பதிவுக் கட்டணம் தற்போதுள்ள நிலவரப்படி ரூபாய் 500 செலுத்தப்பட வேண்டும்.
படிவ எண் 1 என்பது, மாவட்ட பதிவாளருக்கு சங்கத்தை பதிவு செய்யக் கோரும் விண்ணப்பம் ஆகும்.
படிவ எண் 5 என்பது, பதிவு செய்யப்பட்ட அலுவலகம் இருக்குமிடம் பற்றிய விபரத்தையும், மாற்றம் ஏற்பட்டால் அதைப்பற்றிய விபரத்தையும் தெரிவிக்கும் படிவம் ஆகும்.
படிவ எண் 6 என்பது, சங்க உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள் கொண்ட பதிவேடு ஆகும்.
சங்க விவரக்குறிப்பு என்பது சங்கத்தின் பெயர், சங்கத்தின் குறிக்கோள் மற்றும் குழு உறுப்பினர்களின் பெயர்கள், முகவரிகள், அவர்கள் செய்யும் தொழில்கள் பற்றிய விபரங்களை கொண்ட விவரக்குறிப்பு ஆகும். இத்துடன் சங்கத்தின் தனி விதிகளையும் (Bye - laws) இணைப்பாக கொண்டதாகும்.
சங்கத்தின் தனி நிலைச் சட்ட விதிகள் (Bye - laws) விதி 6 இல் கூறப்பட்டுள்ள விபரங்களை கொண்டிருக்க வேண்டும்.
சங்கத்தின் பெயரும், பெயர்ப் பலகையும் :
சங்கத்தின் பெயர் சட்டப் பிரிவு 9 இல் கூறப்பட்டுள்ளதற்கு இணங்க இருக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிற ஒரு சங்கத்தின் பெயரையோ, கூட்டுறவு, நிலவளவங்கி, இந்திய மத்திய வங்கி போன பெயர்களையோ சேர்க்கக்கூடாது. பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் அவர்களது அலுவலகம் இருக்கும் இடத்தில் சங்கப் பெயர் பலகையை வைக்க வேண்டும். பெயர் பலகை எந்த மொழியில் இருந்தாலும் "தமிழிலும்" வைக்கப்பட வேண்டும். (பிரிவு 13)
சங்க உறுப்பினர்களும், உறுப்பினர் பதிவேடும் :
ஒரு சங்கத்தின் உறுப்பினர்கள், சாதாரண உறுப்பினர்கள் (Ordinary Members) ஆயுள் உறுப்பினர்கள் (Life Members) மற்றும் காப்பாளர்கள் (Custodians) என பல வகைகளால் இருக்கலாம். ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிய சந்தா தொகையினை சங்கம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்.
ஒவ்வொரு சங்கமும் படிவம் எண் 6 குறிப்பிட்டுள்ளபடி உறுப்பினர் பதிவேட்டை பராமரித்து வர வேண்டும். உறுப்பினர்கள் சேர்ந்த தேதி மற்றும் விலகிய தேதி போன்றவற்றை உடனுக்குடன் பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.
சங்க பொதுக்குழுவும், செயற்குழுவும் :
சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்த அமைப்பு, சங்கத்தின் பொதுப் பேரவை (General Body) அல்லது பொதுக்குழு எனப்படும். பொதுக்குழு கூட்டம் ஆண்டுக் ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும்.
சங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் குழு, நிர்வாக குழு (Executive Committee) அல்லது செயற்குழு எனப்படும்.
செயற்குழு எனப்படும் நிர்வாக குழுவில் குறைந்த பட்சம் 3 உறுப்பினர்கள் இருக்க வேண்டும் அதிகபட்ச உறுப்பினர்கள் பற்றி சட்டத்தில் குறிப்பிடப்படாததால், சங்கத்தின் தனிநிலைச் சட்ட விதியில் (Bye laws) கூறப்பட்டுள்ள எண்ணிக்கைக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
நிர்வாக குழு உறுப்பினர்களின் பதவிக் காலம், தேர்ந்தெடுக்கப்பட்ட / நியமனம் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடாது.
ஒவ்வொரு ஆண்டிலும் நிர்வாக குழு எத்தனைமுறை கூட வேண்டும், எத்தனை நாட்களுக்கு முன்பாக கூட்டம் பற்றிய அறிவிப்பு கொடுக்க வேண்டும், அக்கூட்டத்துக்கான குறைவெண் வரம்பு (வர வேண்டியவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை எவ்வளவு) போன்றவைகளுக்கு சங்கத்தின் துணை விதிகளில் (Bye laws) நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.
சங்கம் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் :
சட்ட விதி 18 ன் படி (Rule 18) ரொக்கப் பதிவேடு (cash book), பற்றுச்சீட்டுப் புத்தகம் (receipt book), சான்று சீட்டு கோப்பு (voucher file), பேரேடு (ledger), மாதாந்திர பதிவேடு (monthly register), கடித போக்குவரத்து கோப்புகள், நிகழ்ச்சி குறிப்பு பதிவேடுகள் (Minutes book) போன்ற பதிவேடுகள் சங்கத்தால் பராமரிக்கப்பட வேண்டும்.
பிரிவு 16 மற்றும் விதி 19 ன்படி ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை உள்ள ஒவ்வொரு நிதி ஆண்டு முடிந்ததும், சங்கத்தின் அந்த நிதி ஆண்டுக்கான கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு வரவு - செலவு அற (income and expenditure statement), இருப்பு நிலை கணக்கு ஏடு (balance sheet) முதலியவை தணிக்கையாளரால் தயாரிக்கப்பட்டு, நிதி ஆண்டு முடிந்த 6 மாதத்திற்குள் பொதுக்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு அங்கீகாரம் (approval) பெறப்பட வேண்டும்.
ஆண்டுதோறும் பதிவாளருக்கு அனுப்ப வேண்டிய ஆவணங்கள் (பிரிவு 16& விதி 22):
நிதி ஆண்டு முடிந்த 6 மாதங்களுக்குள், சங்கம் தனது பொதுக்குழுவை கூட்டி தணிக்கையாளரின் அறிக்கையை தாக்கல் செய்து, பொதுக்குழுவின் அங்கீகாரத்தை பெற வேண்டும் அந்த பொதுக்குழு கூட்டம் முடிந்த 6 மாதங்களுக்குள் கீழே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை பதிவாளருக்கு அனுப்ப வேண்டும்.
1. வரவு - செலவு கணக்கு மற்றும் இருப்பு நிலை அறிக்கை
2. தணிக்கையாளரின் அறிக்கை
3. கணக்கு ஆண்டு முடிந்த கடைசி நாளில், சங்கத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்களின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொழில் பற்றிய விபரங்களுடன் கூடிய பட்டியல்
4. சங்கம் பணியாற்றி வருவது பற்றிய உறுதிமொழி (பிரிவு 16(3)(b)(iii) இல் கண்டுள்ள படி)
5. தேர்தல் நடத்தப்படும் பொதுக்குழுவிற்கு பிறகு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் விவரம்
(குறிப்பு - தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் 1975 இல் கண்டுள்ள சில முக்கியமான விவரங்களை மட்டுமே இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு வழக்கறிஞர்களையோ அல்லது சட்டப் புத்தகத்தையோ அணுகலாம்)

எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்


எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல் நாகர்கோவில்: சர்வ சிக்‌ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிக்‌ஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறையில் சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ), ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் (ஆர்எம்எஸ்ஏ) ஆகிய இரண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2002ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி திட்டம் மத்திய அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தில் 1 முதல் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல் வழிக்கற்றலும், 5 முதல் 8ம் வகுப்பு வரை படைப்பாற்றல் கல்வி முறையிலும் கல்வி கற்பித்தல் நடைபெறுகிறது. இதில் 6 முதல் 8ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, பள்ளி வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளை கட்டுவது, பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிதல், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான கல்வி, பெண் கல்வி போன்ற பல்வேறு கல்வி இணை செயல்பாடுகள் இந்த திட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கடந்த 2012ம் ஆண்டோடு இத்திட்ட செயல்பாடுகள் முடிவுக்கு வந்த நிலையில் பின்னர் காலநீட்டிப்பு செய்யப்பட்டது. மேலும் கடந்த 2005ம் ஆண்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டம் (ஆர்எம்எஸ்ஏ) மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. தற்போது நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஒரே கல்வி திட்டத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அந்த வகையில் பள்ளி கல்வித்துறையில் செயல்படுகின்ற சர்வ சிக்‌ஷா அபியான் (எஸ்எஸ்ஏ) மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்‌ஷா அபியான் ( ஆர்எம்எஸ்ஏ) ஆகியவற்றை இணைத்து ‘சமக்ர சிக்‌ஷா அபியான்’ (எஸ்எஸ்ஏ) என்ற புதிய திட்டத்திற்கு மத்திய  அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்த வகையில் இனி ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான கல்வி செயல்பாடுகள் சமக்ர சிக்‌ஷா அபியானின் கீழ் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே எஸ்எஸ்ஏ மற்றும் ஆர்எம்எஸ்ஏக்கு தனித்தனியே அலுவலர்கள் நியமித்து மாநில அளவில், மாவட்ட அளவில், வட்டார அளவில் கல்வி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இரண்டும் ஒன்றிணைக்கப்படுவதால் இவ்விரு திட்டங்கள் சார்ந்த அலுவலகங்களும் இனி கலைக்கப்படும். அவற்றுக்கு பதிலாக சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை செயல்படுத்த புதிய அலுவலர்களை கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். ஒரே அலுவலகம் செயல்படும். கல்வித்துறை அமைச்சரை தலைவராக கொண்ட ஆளுகை குழுவும், பொது கல்வித்துறை செயலாளரை கொண்ட நிர்வாக குழுவும் இடம்பெறும். புதிய குழுக்களுக்கான அதிகாரங்களும், கட்டுப்பாடுகளும் தொடர்பான விதிமுறைகள் ஒரு மாத காலத்திற்குள் வகுக்கப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் திட்டம் செயல்பாட்டிற்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது எஸ்எஸ்ஏ, ஆம்எஸ்எஸ்ஏக்கு நியமிக்கப்பட்டுள்ள தனித்தனி திட்ட இயக்குநர்களுக்கு பதிலாக ஒரே திட்ட இயக்கநர் இடம்பெறுவார். சமக்ர சிக்‌ஷா அபியானுக்கு நிதி ஒதுக்கீடுகள் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.  இவை ஒருபுறம் இருக்க வரும் கல்வியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளில் மாவட்ட அளவில் கல்வித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சமக்ர சிக்‌ஷா அபியான் தொடர்பான வரைவு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. பட்ஜெட் விபரங்கள் ஓரிரு நாட்களில் மாநில திட்ட இயக்குநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விபரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சமக்ர சிக்‌ஷா அபியானில் தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள், டெல்லி, புதுச்சேரி உள்ளிட்ட 2 யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு இடம்பெறும். இதில் மத்திய அரசின் பங்களிப்பு 60 சதவீதமும், மாநில அரசின் பங்களிப்பு 40 சதவீதம் என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழகத்திற்கு வரும் 2018-19ம் கல்வியாண்டுக்கு மொத்தம் 1427.37 கோடி மத்திய அரசின் பங்களிப்பு ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம், மணிப்பூர் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு 90:10 என்ற அடிப்படையில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல் பிரதேசம் ஆகியவற்றுக்கும் 90:10 அளவிலும், சண்டிகர், அந்தமான், லட்சத்தீவு உள்ளிட்டவற்றுக்கு 100 சதவீதமும் மத்திய அரசு நிதி வழங்கப்படுகிறது. மொத்தத்தில் வரும் கல்வியாண்டுக்கு 33 ஆயிரம் கோடி சமக்ரா சிக்‌ஷா அபியானுக்காக மத்திய அரசு பங்களிப்பாக நிதி ஒதுக்கீடு செய்கிறது.

6 மே, 2018

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது அமைச்சர் முன்னிலையில் நடந்த விழாவில் நீதிபதி கிருபாகரன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது அமைச்சர் முன்னிலையில் நடந்த விழாவில் நீதிபதி கிருபாகரன் குற்றச்சாட்டு


தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது என்று அமைச்சர் முன்னிலையில் நடந்த விழாவில் நீதிபதி கிருபாகரன் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சீர்கெட்டு போய் விட்டது திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் இதழ் வாசித்து சாதனை படைத்துள்ளனர். இதற்கான சான்றிதழை வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர் செங்கோட்டையன், ஐகோர்ட்டு நீதிபதி கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பேசிய நீதிபதி கிருபாகரன் கல்வித்துறை குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. விழாவில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:- இன்றைக்கு தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டு போய் விட்டது. இதற்கு சிலரின் நடவடிக்கை தான் காரணம். இதை நினைவில் கொள்ள வேண்டும். தவறு செய்பவர்களை தயவு செய்து தாங்கி பிடிக்காதீர்கள். தவறு செய்பவர்களை தாங்கி பிடித்தால் நீங்கள் செய்யும் வேலைக்கு செய்கின்ற துரோகம். கல்விக்கு செய்யும் துரோகம். அது நான் செய்தாலும் துரோகம் தான். தவறாக தீர்ப்பை எழுதினால் என்னுடைய கை, கால்கள் ஒழுங்கா இருக்குமா?, வருங்கால சந்ததிகள் நன்றாக இருக்குமா?. நிச்சயமாக இருக்காது. தவறாக நான் தீர்ப்பு எழுதினால் என்னுடைய கை கால்கள் விளங்காமல் போய் விடும். அதேபோன்று ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்யாவிட்டால் இதே நிலை தான் ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார். தள்ளுமுள்ளு முன்னதாக நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் கால தாமதமாக வந்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; தமிழக அரசு உறுதி

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; தமிழக அரசு உறுதி

வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 5000 ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்; தமிழக அரசு உறுதி.தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள 5000 அரசு ஆசிரியர் பணியிடங்கள் வரும் கல்வியாண்டில் நிரப்பப்படும் என்று தமிழக அரசுஉறுதி அளித்துள்ளது.
  1. 884 - தலைமை ஆசிரியர்
  2. 1687 - பட்டதாரி ஆசிரியர்
  3. 2405 - தலைமை ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர்

பள்ளிக் கல்வி புதிய பாடப்புத்தகங்களின் சிறப்பு என்ன..

பள்ளிக் கல்வி புதிய பாடப்புத்தகங்களின் சிறப்பு என்ன..


தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6,9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான அனைத்து பாடங்கள் மற்றும் மொழிப் பாடங்களில் தயாரிக்கப்பட்டுள்ள 147 தலைப்புகளில் அமைந்துள்ள பாடநூல்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 4.5.2018 தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.இந்த நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் பா. வளர்மதி, பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் (கலைத்திட்டம்) த.உதயசந்திரன், கலைத்திட்ட வடிவமைப்புக் குழுவின் தலைவர் அனந்தகிருஷ்ணன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டி. ஜெகன்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தேசியக் கலைத்திட்டம் 2005-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட நிலையிலும், மாநிலத்தில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் 7 ஆண்டுகளுக்கு முன்பும், மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 12 ஆண்டுகளுக்கு முன்பும் மாற்றம் செய்யப்பட்ட நிலையிலும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மேம்பாட்டைக் கருத்தில் கொண்டு, புதிய பாடத்திட்டம் மற்றும் புதிய பாடநூல்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டது.அதன் அடிப்படையில், மாணவர்களின் முழுமையான ஆளுமை திறனை வளர்த்திடவும், செயல்வழி கற்றல் முறை மற்றும் படைப்பாற்றல் திறனை ஊக்குவிக்கும் வகையிலும், சிந்தனைத் திறனை வெளிக்கொணரும் வகையிலான மதிப்பீட்டு முறையை உள்ளடக்கியும், உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கேற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கான சவால்களை மாணவர்கள் உறுதியோடு எதிர்கொள்ளும் வகையிலும், மிகச் சிறந்த கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்களை கொண்டு புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் உருவாக்கப்பட்டுள்ளன. உதய்சந்திரன்தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் புதிய பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தால் அச்சிடப்பட்டுள்ள 1, 6, 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள், சிறந்த கட்டமைப்பு, தகுந்த படங்கள் மற்றும் பாடம் சார்ந்த தகவல்களைக் கொண்டுள்ளதோடு, மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாகத் தகவல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் வாய்ப்புகளையும் அளிக்கிறது. இப்புதிய பாடத்திட்டமும், பாடநூல்களும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தரும்என்பது உறுதி'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போது வெளியிடப்பட்டுள்ள புதிய பாடப்புத்தகங்களில், ''குறிப்பிட்ட பாடத்தில் உயர்கல்விக்கான வாய்ப்பு விவரங்கள், மாணவர்கள் பெற வேண்டிய செயலாக்கத் திறன் மற்றும் குறிப்பிட்ட திறனை விவரித்தல், அன்றாட வாழ்க்கை, துறைசார் வளர்ச்சியோடு பாடப் பொருளை தொடர்படுத்தும் கூடுதல் விவரங்கள், தெளிவான புரிதலுக்காக தீர்வுகளுடன் கூடிய மாதிரி கணக்குகள், கற்ற திறன்களை தாங்களே சுயமதிப்பீடு செய்ய உதவி, கருத்துகள், காணொலிக் காட்சிகள், அசைவூட்டங்கள் மற்றும் தனிப்பயிற்சிகள் ஆகியவற்றை 'கியூஆர் கோடு' மூலம் அணுகும் வசதி,கற்றலுக்கான வளங்களுக்கு வழிகாட்டல், மாணவர்கள் அவற்றை அணுகவும் கருத்துகள் மற்றும் தகவல்களை பரிமாறவும் வாய்ப்பளித்தல், பாடப் பொருள் தொடர்பான  கூடுதல் விவரங்களுக்கு இணையதள முகவரி, சுருக்கிய வடிவில் பாடப்பகுதி கருத்து, பாடப்பகுதியின் கருத்துகளை ஒன்றோடொன்று தொடர்புபடுத்துவ தன் மூலம் பாடப் பொருளை உணரச் செய்தல், பன்முக தெரிவு வினா, எண்ணியல் கணக்கீடுகள் ஆகியவை மூலம் மாணவர்களின் புரிதல் நிலை மதிப்பீடு,தொடர் வாசித்தலுக்கு ஏற்ற குறிப்புதவி நூல்களின் பட்டியல், மாணவர்கள் தாங்கள் கண்டறிந்த விடைகளின் சரி தன்மையை உறுதி செய்யவும் கற்றல் இடைவெளியை சரிசெய்து கொள்ளவும் உதவி, முக்கிய கலைச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள், அடிப்படை மாறிலிகள் மற்றும் முக்கிய தரவுகளின் அட்டவணை'' என்று பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

Whatsapp இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

Whatsapp இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

Whatsapp இல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி!

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான, உலகின் மிகப்பிரபலமான இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்ஆப் - பாரபட்சம் இன்றி அதன் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மற்றும் விண்டோஸ் பயனர்கள் என அனைவர்க்கும் - பொதுவான முறையில், எளிமையான அம்சங்களை வழங்குவதில் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறது. அதிலும், கடந்த ஒரு மாத காலமாக வாட்ஸ்ஆப்பில், பல புதிய அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன. 

அதில் மிகவும் குறிப்பிட்டு கூறவேண்டிய அம்சங்கள் என்று பார்த்தால், ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்து டெலிட் செய்த பின்பும் கூட, இரண்டாம் முறை மீடியா பைல்களை டவுன்லோட் செய்யக்கூடிய திறன் மற்றும் இரண்டிற்கும் மேற்ப்பட்ட அட்மின்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப் க்ரூப்களுக்கான 'டிஸ்மிஸ் ஏஸ் அட்மின்' ஆகியவைகளை கூறலாம். அதற்கு அடுத்தபடியாக, வாட்ஸ்ஆப் அதன் 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை உருட்டியது.
 

இதன் நன்மை என்ன.? இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.? 
 

இந்த வரிசையில் தற்போது வாட்ஸ்ஆப், அதன் க்ரூப் அட்மின்களுக்கான சக்தியை (கட்டுப்பாட்டை) அதிகரிக்கும் ஒரு அம்சத்தை அதன் அனைத்து தளங்களிலும் உருட்டியுள்ளது. அதாவது, வாட்ஸ்ஆப், அதன் அனைத்து ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு குறிப்பிட்டுள்ள அம்சத்தை இணைத்துள்ளது, அது என்ன அம்சம்.? இதன் நன்மை என்ன.? க்ரூப் அட்மின்கள் இதை எதெற்கெல்லாம் பயன்படுத்தலாம்.?
 

மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்கள்.! 
 

"ரெஸ்ட்ரிக்ட் க்ரூப்" (Restrict Group) என்கிற பெயரை கொண்டுள்ள இந்த புதிய அம்சமானது, ஒரு வாட்ஸ்ஆப் க்ரூப்பின் அட்மினுக்கு, மெம்பர் ஒருவர் அனுப்பும் குறிப்பிட்ட டெக்ஸ்ட் மெசேஜை, புகைப்படங்களை, வீடியோக்களை,கிப் பைல்களை, டாகுமெண்ட்ஸ்களை அல்லது வாய்ஸ் மெசேஜை கட்டுப்படுத்தும் சக்தியை வழங்கும். எளிமையாக கூறவேண்டும் என்றால், ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது க்ரூப்பின் மெம்பர்களை கட்டுப்படுத்தும் அதிகாரங்களை அட்மின்களுக்கு வழங்கும்.
 

வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும்.! 
 

புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது தளத்திற்கு உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோவின் (WABetaInfo) கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் அணுக கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன், ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

ஒரே ஒரு முறை மட்டுமே டவுன்லோட்.! 
 

முன்னதாக, வாட்ஸ்ஆப்பின் வழியாக நாம் டவுன்லோட் செய்யும் போட்டோக்கள், GIFகள் மற்றும் ஷார்ட் கிளிப்புகள் ஆனது, டவுன்லோட் செய்த நாளில் இருந்து அடுத்த 30 நாட்கள் வரை, வாட்ஸ்ஆப் சேவையகத்தில் சேமித்து வைக்கப்ப்பட்டு இருக்கும். ஒருமுறை டவுன்லோட் செய்து ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் டெலிட் செய்யாத பட்சத்தில் மட்டுமே, இந்த 30 நாட்கள் என்கிற கணக்கு செல்லுபடியாகும். ஒருவேளை டெலிட் செய்து விட்டால் மறுமுறை டவுன்லோட் செய்ய கிடைக்காது என்கிற நிலைப்பாடு இருந்தது.
 

ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.! 
 

அதாவது, ஒரு முறை டவுன்லோட் செய்யப்பட்ட பைலை, ஸ்மார்ட்போன் சேமிகப்பதில் இருந்து டெலிட் செய்து விட்டால், அதை மீண்டும் வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியாது. ஆனால், அதை சாத்தியமாகும் வண்ணம் ஒரு மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. அதற்காக, வாட்ஸ்ஆப் சேமிப்பக நெறிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ஆக, இனி ஒரு பயனரால் டவுன்லோட் செய்யப்பட்டு டெலிட் செய்யப்பட்டாலும் கூட, வாட்ஸ்ஆப்பின் சர்வரில் கிடைக்கப்பெற்ற அனைத்து செய்திகளும், மல்டிமீடியா உள்ளடக்கங்களும், மீண்டும் அணுகுவதற்காக சேமித்து வைக்கப்பட்டு இருக்கும். இந்த இடத்தில் வாட்ஸ்ஆப் சேவையகம் மறைகுறியாக்கப்பட்டது (என்க்ரிப்ட்ட்) என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். அதாவது இந்த பைல்களை ஒரு பயனரை தவிர, வேறு யாராலும் அணுக முடியாது.
 

எந்த வாட்ஸ்ஆப் வெர்ஷனில் கிடைக்கும்.? 
 

வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை பதிவிறக்கம் செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.
 

சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் எப்படி வேலை செய்கிறது.? 
 

இதற்கு முன்னதாக வெளியான 'சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ்' என்கிற அம்சத்தை பொறுத்தவரை, முன்னதாக, ஒரு பயனர் வாய்ஸ் மெசேஜை ரெக்கார்ட் அம்சத்தை பயன்படுத்தும் போது அவர் குறிப்பிட்ட சாட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் இனி ஒரு வாய்ஸ் மெசேஜை பதிவு செய்யும், அதே நேரத்தில் அழைப்புகள் அல்லது பேட்டரி தீர போகிறது அல்லது வேற ஆப்பிற்குள் நுழைய வேண்டும் என்றால், தாராளமாக வாட்ஸ்ஆப் சாட்டை விட்டு வெளியேறலாம்.
 

சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால்.? 
 

நீங்கள் பதிவு செய்த வரையிலான வாய்ஸ் மெசேஜ் ஆனது வாட்ஸ்ஆப்பில் சேமிக்கப்பட்டு இருக்கும். எனவே நீங்கள் மீண்டும் மற்றொரு முறை பதிவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. இப்படி சேவ்டு வாய்ஸ் மெசேஜஸ் அம்சம் வேலை செய்யும். பாதியில் விட்டுச்சென்ற வாய்ஸ் மெசேஜ் ஆனது சரியாக உள்ளதா என்பதை பரிசோதிக்க விரும்பினால், அதற்கும் ஒரு வழி இருக்கிறது. வெறுமனே ஹோம் ஸ்க்ரீன் செல்வதின் வழியாக வாய்ஸ் மெசேஜை கேட்க முடியும் என்று வெளியான WaBetaInfo அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை மேம்படுத்தல்.! 
 

வாட்ஸ்ஆப் பீட்டாவில், இந்த அம்சம் முன்னிருப்பாக ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு விட்டதால், வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்கள், உள்நுழையவும் இதை உடனடியாக பயன்படுத்தத் தொடங்கலாம். இதற்கிடையில், மே 25 அன்று ஐரோப்பாவில் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ், வாட்ஸ்ஆப் அதன் சேவை விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கைகளையும் மேம்படுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும்.! 
 

நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளோடு சேர்த்து, Request Account info என்கிற ஒரு அம்சமும் இடம் பெற உள்ளது. வாட்ஸ்ஆப் பயன்பாட்டின் அடுத்த பதிப்பானது, மே 25-ல் வெளியானால், இந்த அம்சத்தினை அனைவராலும் பார்க்க முடியும். இந்த அம்சமானது வாட்ஸ்ஆப் மூலம் சேகரிக்கப்படும், பயனர் ஒருவரின் சிறிய அளவிலான டேட்டாவை டவுன்லோட் செய்ய உதவும். இந்த அம்சமானது, உலகம் முழுவதும் உள்ள எல்லா பயனர்களுக்கும் உருட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர்.! 
 

"ரெக்வஸ்ட் அக்கவுண்ட் இன்ஃபோ" என்கிற இந்த புதிய அம்சமானது, வாட்ஸ்ஆப்பின் செட்டிங்ஸ்-ல் காணப்படும். அதை கிளிக் செய்து பின்னர் 'அக்கவுண்ட்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய "ரெக்வஸ்ட் அனுப்பட்டது" என்கிற நோட்டிபிகேஷன் கிடைக்கும். கோரிக்கை நிகழ்த்தப்பட்ட தேதியிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்குள் வந்து சேரும். ஒரு முறை ரெக்வஸ்ட் செய்த பின்னர் நடுவில் ரத்து செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும்.! 
 

ஒருவேளை கண்டிப்பாக அனுப்பிய ரெக்வஸ்ட்டை கேன்சல் செய்ய வேண்டும் என்றால், ஒன்று உங்களின் வாட்ஸ்ஆப் அக்கவுண்ட்டை டெலிட் செய்ய வேண்டும் அல்லது, வாட்ஸ்ஆப் நம்பரை மாற்ற வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை செய்வதின் விளைவாக, அனுப்பட்ட கோரிக்கையை ரத்து செய்யலாம். உங்கள் அக்கவுண்ட் சார்ந்த விவரங்கள் டவுன்லோட் செய்ய திறந்து விடப்பட்டுள்ளது என்கிற தகவலை வாட்ஸ்ஆப் உங்களுக்கு அனுப்பி வைக்கும். அந்த அறிவிப்பு கிடைத்த அடுத்த சில வாரங்களுக்குள் அதை நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டும். இல்லையெனில் அது வாட்ஸ்ஆப் சேவையகங்ளில் இருந்து குறிப்பிட்ட தகவல்கள் நீக்கப்படும்.
 

சுவாரசியம் என்னவெனில்.! 
 

மேற்குறிப்பிட்ட அதே வழிமுறைகளை பின்பற்ற இறுதியாக "டவுன்லோட் ரிப்போர்ட்" என்கிற ஒரு விருப்பம் உங்களுக்கு கிடைக்கும். அதை டாப் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். டவுன்லோட் செய்யப்பட்ட டேட்டா ஆனது ஸிப் பைல் வடிவத்தில் அணுக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. சுவாரசியம் என்னவெனில், டவுன்லோட் செய்த ரிப்போர்ட்டை நிரந்தரமாக டெலிட் செய்யும் ஒரு அம்சத்தையும் வாட்ஸ்ஆப் வழங்குகிறது.