SSLC EXAM MARCH 2018 RE TOTAL DETAILS | மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் பள்ளி மாணாக்கர் மறுகூட்டலுக்கான கட்டணத்தை தாங்கள் பயின்ற பள்ளியில் செலுத்த வேண்டும்.
மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும் முறை மார்ச் / ஏப்ரல் 2018, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாம் தேர்வெழுதிய எந்தவொரு பாடத்திற்கும் மறுகூட்டலுக்கு (Retotalling) விண்ணப்பிக்கலாம். மார்ச் / ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு தேர்வெழுதி விடைத்தாட்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விழைவோர் 24.05.2018 (வியாழக் கிழமை) முதல் 26.05.2018 (சனிக் கிழமை) மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மறுகூட்டல் கட்டணம் பகுதி – I மொழி - ரூ.305/- பகுதி – II மொழி (ஆங்கிலம்) - ரூ.305/- பகுதி – III - கணிதம், அறிவியல் மற்றும் - ரூ.205/- சமூக அறிவியல் பகுதி – IV விருப்ப மொழிப்பாடம் - ரூ.205/- மறுகூட்டலுக்கான கட்டணம் செலுத்தும் முறை மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளி மாணாக்கர் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலும் பணமாகச் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒப்புகைச் சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே தேர்வர்கள் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள இயலும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக