BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

19 ஜூன், 2018

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம்

உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் அறிமுகம்
உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த, அபார சாதுர்யத்துடன் செயல்படக் கூடிய சூப்பர் கம்ப்யூட்டர்' எனப்படும் அதிவேகக் கணினியை அமெரிக்க விஞ்ஞனிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அந்த நாட்டின் எரிசக்தித் துறையைச் சேர்ந்த ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வக'த்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கணினி, நொடிக்கு 2 லட்சம் டிரில்லியன் (ஒரு டிரில்லியன் = ஒரு லட்சம் கோடி) கணக்கீடுகளை செய்ய வல்லது ஆகும். இதுவரை ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்கவம் உருவாக்கிய அதிசக்தி வாய்ந்த டைட்டன்' கணினியைவிட இது 8 மடங்கு அதிக வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்மிட்' என்று பெயரிடப்பட்டுள்ள அதிவேகக் கணினியின் மூலம் எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு துறைகளில் இதுவரைt இல்லாத அதீத ஆற்றலுடன் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக