BREAKING NEWS

Tnpsc Free Online Test | Tnpsc Online Mock Test In Tamil

18 ஜூன், 2018

பிஎட் படிப்புக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம்

பிஎட் படிப்புக்கு ஜூன் 21 முதல் விண்ணப்பம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள், திருவல்லிக்கேணி மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள 2 கல்வியியல் மேம்பாட்டு நிறுவனங்களில் பயிற்றுவிக் கப்படும் பிஎட் இடங்கள், ஒற்றைச்சாளர முறையில் கலந்தாய்வு மூல மாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 21 - 30 வரை (சனி, ஞாயிறு உட்பட) வழங்கப்படும். விண்ணப்பங்கள் சென்னையில் மேற்கூறிய நிறுவனங்களிலும், குமாரபாளையம், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, கோவை, வேலூர் அரசு கல்வியியல் கல்லூரிகளிலும், திண்டுக்கல் காந்திகிராமம் லட்சுமி கல்வியியல் கல்லூரி, சேலம் பேர்லாண்ட்ஸ் ஸ்ரீசாரதா கல்வியியல் கல்லூரி, மதுரை தியாகராசர் பர்செப்டார் கல்லூரி, தூத்துக்குடி வஉசி கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை செயின்ட் இக்னேஷியஸ் கல்வியியல் கல்லூரி, திருவட்டாறு ஆத்தூர் என்.வி.கே.எஸ்.டி. கல்லூரி ஆகிய இடங்களில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ.500. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.250. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3-ம் தேதி மாலை 5 மணிக்குள், "தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலர், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், காமராஜர் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை-600 005" என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை சாந்தி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக